திருத்தணி அருகே வீரகநல்லூர் ஊராட்சி பகத்சிங் நகர் மற்றும் பட்டாபிராமபுரம் ஊராட்சி ஆர் டி ஓ சத்யா நகர் இரண்டு கிராமங்களும் இருளில் மூழ்கியுள்ளது. இரண்டு கிராமத்திற்கும் தெரு மின் கம்பங்கள் உள்ளபோதிலும் இன்னும் மின் விளக்கு அமைக்கப்படவில்லை. உடனடியாக தெரு மின் விளக்கு அமைக்க கோரி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் வட்டச் செயலாளர் அந்தோணி, மாவட்டக்குழு உறுப்பினர் அப்சல்அகமத், வட்டக்குழு உறுப்பினர் பாலாஜி மற்றும் கிராம மக்கள் வட்டார வளர்ச்சி அலுவலரிடம் மனு அளித்தனர். மனுவை பெற்றுக் கொண்ட அலுவலர் உடனடியாக நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதியளித்தார். கிளைச் செயலாளர் சஞ்சீவி சண்முகம், கஸ்தூரி ஆகியோர் அப்போது உடன் இருந்தனர்.