சென்னை, மே 10- திட்ட அனுமதியில் மாமன்ற உறுப்பினர்கள் தலையிட்டு லஞ்சம் பெறு வது போன்ற தகாத செயல்க ளில் ஈடுபட்டால் பதவி பறிப்பு உள்ளிட்ட நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என உறுப்பினர்களுக்கு சென்னை மாநகராட்சி சார்பில் எச்சரிக்கை விடுக்கப் பட்டுள்ளது. சென்னையில் மாமன்ற உறுப்பினர்கள் பலர், வீட்டு உரிமையாளர்களிடம் லஞ்சம் பெறும் நோக்கில், திட்ட அனுமதிக்கு பணம் பெறுவது, விதிமீறிய கட்டடங்கள் மீது நடவ டிக்கை எடுக்காமல் தடுப்ப தற்கு லஞ்சம் பெறுவது உள்ளிட்ட செயல்களில் ஈடுபடுவதாக தொடர்ந்து புகார்கள் கூறப்படுகிறது. கடந்த மாதம் வட சென்னை பெண் மாமன்ற உறுப்பினரின் கணவர் கட்டுமான பணிக்கு லஞ்சம் கேட்பதாக புகார் எழுந்தது. இதுபோன்று பல்வேறு பகுதிகளிலும், மாமன்ற உறுப்பினர்கள் லஞ்சம் பெறுவது அதிகரித்துவரும் நிலையில், அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க முதல் வர் ஸ்டாலின், சென்னை மாநகராட்சிக்கு உத்தரவிட் டுள்ளார். அதன்படி திட்ட அனு மதியில் மாமன்ற உறுப்பினர் கள் தலையிட்டு லஞ்சம் பெறுவது போன்ற செயல்க ளில் ஈடுபட்டால் பதவி பறிப்பு உள்ளிட்ட நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என சென்னை மாநகராட்சி எச்சரிக்கை விடுத்துள்ளது. இந்த எச்சரிக்கையும் மீறி கட்டட அனுமதி, விதிமீறிய கட்டடங்களுக்கு ஆதரவாக உறுப்பினர்கள் செயல்பட்டால், முதல்வர் கவனத்துக்கு கொண்டு செல்லப்பட்டு, பதவி பறிப்பு உள்ளிட்ட நடவடிக்கை மேற்கொள்ளப்படும். எனவே, உறுப்பினர்கள் விதி மீறல்களில் ஈடுபடாமல், தங்களது பணியை மட்டும் மேற்கொள்ளும்படி அறிவு றுத்தப்பட்டுள்ளது என்றார்.