districts

img

கிள்ளை ஆரம்ப சுகாதார நிலையத்தில் பாகுபாடு: இருளர் இன மக்கள் முற்றுகை

சிதம்பரம், செப். 25- சிதம்பரம் அருகே கிள்ளையில் உள்ள ஆரம்ப சுகாதார நிலையத்தில் பொன்னந்திட்டு, சிங்கார குப்பம், எம்ஜிஆர் நகர், தளபதி நகர் கலைஞர் நகர், சிசில் நகர் உள்ளிட்ட 15-க்கும் மேற்பட்ட பகுதி மக்கள் சிகிச்சை பெற்று வருகின்றனர். சில மாதங்களாக ஆரம்ப சுகாதார நிலை யத்திற்கு வரும் இருளர் இன மக்களுக்கு சரியான மருத்துவம் பார்ப்பதில்லை என்றும் கேலி,கிண்டல் செய்கிறார்கள் என்று 100க்கும் மேற்பட்ட இருளர் இன மக்கள் முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.  அப்போது, சம்பந்தப்பட்ட செவிலியர் மற்றும் மருத்துவரை உடனடியாக இடமாற்றம் செய்ய வேண்டும் என்று முழக்கமிட்டனர். இந்த தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த புதுச்சத்திரம் வட்டார மருத்துவ அலுவலர் அமுதா பேச்சுவார்த்தை நடத்தினார்.  அப்போது, உரிய நடவடிக்கை எடுப்பதாக எழுத்து பூர்வமாக உறுதிய ளித்தார். அதனை ஏற்று அனைவரும் கலைந்து சென்றனர்.  இருளர் இன மக்க ளுக்கு ஆதரவாக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பரங்கிப்பேட்டை சுனில் குமார் உள்ளிட்டோர் உரையாற்றினர்.