திருவள்ளூர் நவ.22- திருவள்ளூர் மாவட்டம்,பழவேற்காட்டில் அட்சுவா டிரஸ்ட் சார்பில் பேரிடர் குறித்து மீனவ சமுதாய மக்களுக்கு விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது. டிரஸ்ட் தலைவர் சேவா.எஸ்.ஏ.செல்லதுரை தலைமையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பொன்னேரி தீயணைப்பு மற்றும் மீட்பு பணி நிலைய அலுவலர் சம்பத் கலந்து கொண்டு பேரிடர் தடுப்பு நடவடிக்கைகள் குறித்து பேசினார்.பழவேற்காடு பகுதி தன்னார்வலர்கள் பேரிடர் குறித்த விழிப்புணர்வு நாடகம் நடத்தினர்.மேலும் பழவேற்காடு ஏரியில் விழுந்தவர்களை எவ்வாறு காப்பாற்றுவது என்பது குறித்த பயிற்சி விளக்க ஒத்திகையை பழவேற்காடு அட்சுவா பேரிடர் மீட்பு குழுவினர் செய்து காட்டினர். இந்த நிகழ்ச்சியில் பழவேற்காடு மீன்வளத்துறை ஆய்வாளர் பாரதிராஜா,திருப்பாலைவனம் காவல்துறை தலைமை காவலர் தனபால்,திட்ட மேலாளர் ரிச்சர்ட் விஜயன்,நிகழ்ச்சி அமைப்பாளர் லல்லி பாலாஜி உள்ளிட்டோர் பங்கேற்றனர்.