மாற்றுத்திறனாளிகள் தினத்தையொட்டி தமிழ்நாடு அனைத்துவகை மாற்றுத்திறனாளிகள் மற்றும் பாதுகாப்போர் உரிமைகளுக்கான சங்கத்தின் சார்பில் பெரம்பூரில் 100 மாற்றுத்திறனாளிகளுக்கு அரிசி உள்ளிட்ட மளிகை பொருட்கள் வழங்கப்பட்டது. இதில் நெய்தல் தொண்டு நிறுவனத்தின் தலைவர் சாந்தி செல்வம், 35ஆவது வார்டு மாமன்ற உறுப்பினர் ஜிவன், சங்கத்தின் மாவட்ட தலைவர் ஜெயசந்திரன், மாவட்டச் செயலாளர் எஸ்.ராணி, பகுதி தலைவர் ராஜி, செயலாளர் நட்ராஜ், பொருளாளர் ஜெயந்தி, தில்ஷாத், கீதா சாரதி உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.