சென்னை,பிப்.19- மாற்றுத்திறனுடைய நபர்கள் மாற்றுத் திறனற்ற நபர்களை விட அதிக சமூக பொருளாதார தாக்கங்களை எதிர்கொள் கின்றனர். சாமான்யருக்கு வாழ்க்கை யில் தான் போராட்டம் ஆனால் மாற்றுத் திறனாளிகளுக்கோ வாழ்க்கையே போராட்டமாக இருக்கும் சூழலில் அவர் களுக்காக தனித்துவம் வாய்ந்த மாபெரும் சங்கமாக விளங்குகிறது தமிழ்நாடு அனைத்துவகை மாற்றுத்திறனாளிகள் மற்றும் பாதுகாப்போர் உரிமைகளுக்கான சங்கம் இந்த அமைப்பின் மாநில அலுவலக திறப்பு விழா சென்னை சைதாப்பேட்டை கிழக்கு ஜோன்ஸ்சாலையில் செவ்வா யன்று (பிப்.20) உயர்நீதிமன்ற மேனாள் நீதிபதி சந்துரு திறந்து வைக்கிறார். சங்கக் கொடியை அகில இந்திய செயல் தலைவர் எஸ்.நம்புராஜன் ஏற்றி வைக்கிறார். விழாவின் சிறப்பு விருந்தினராக மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன், சமூக நலன் மற்றும் மகளிர் உரிமையியல் துறை அமைச்சர் பி.கீதா ஜீவன் ஆகியோர் பங்கேற்கின்றனர். மாநில பொதுச்செய லாளர் பா.ஜான்சிராணி தலைமையில் மாநிலத்தலைவர் தோ.வில்சன் வரவேற் புரையாற்றுகிறார். மாற்றுத்திறனாளிகளின் நலனுக்காக தன்வாழ்நாள் முழுவதும் போராடி மறைந்த தோழர் டி.லட்சுமணன் படத்தை மாநிலத்துணைத்தலைவர் ப.சு.பாரதி அண்ணா திறந்து வைக்கிறார். காயிதே மில்லத் ஆண்கள் கல்லூரி, தாளாளர் தாவூத் மியாகான், தீண்டாமை ஒழிப்பு முன்னணி மாநிலத்தலைவர் பி.சம்பத், டிசம்பர்3 இயக்கம் தலைவர் டி.எம்.என்.தீபக், பி.மனோகரன் (தேசிய பார்வையற்றோர் இணயம்), இரா.தெ.முத்து (தமுஎகச), டி.செந்தில்குமார் (ஏஐஐஇஏ), எஸ்.வாலண்டினா (அனைத்திந்திய ஜனநாயக மாதர்சங்கம்), ப.சிம்ம சந்திரன் (மாற்றுத் திறனாளிசங்களின் கூட்டமைப்பு) , பாலாஜிசம்பத் (எய்டு இந்தியா), ஆர்.ராதா கிருஷ்ணன் (கருணைடிரஸ்ட்), பா.சுவாமி நாதன்(கட்டிடஉரிமையாளர்), எம்.உஷாராணி (சென்னை தீக்கதிர் பொது மேலாளர்) ஆகியோர் பங்கேற்கின்றனர். நிகழ்ச்சியின் நிறைவாக தென்சென்னை மாவட்டச்செயலாளர் எம்.குமார் நன்றி நவில்கிறார்.