100 நாள் வேலை திட்டத்திற்கு ஒன்றிய அரசு நிதி குறைத்துள்ளதைக் கண்டித்து தமிழ்நாடு அனைத்து வகை மாற்றுத்திறனாளிகள் மற்றும் பாதுகாப்போர் உரிமைகளுக்கான நல சங்கம் வடசென்னை மாவட்டக் குழு சார்பில் பெரம்பூர் ரயில் நிலையம் அருகே பகுதி தலைவர் பி.சசிகுமார் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் மாவட்ட நிர்வாகிகள் ஆர்.ஜெயச்சந்திரன், எஸ்.ராணி, ஆர்.நடராஜன், மாவட்ட குழு உறுப்பினர்கள் டி.சாரதி, கீதா, தில்சாத் பேகம், பெரம்பூர் பகுதி நிர்வாகிகள் வி.ெஜயந்தி, சி.முரளி ஆகியோர் பேசினர்.
மாற்றுத்திறனாளிகளை வஞ்சிக்கின்ற ஒன்றிய மோடி அரசின் பட்ஜெட்டை கண்டித்து தமிழ்நாடு அனைத்துவகை மாற்றுத்திறனாளிகள் மற்றும் பாதுகாப்போர் உரிமைகளுக்கான சங்கத்தின் சார்பாக செங்கல்பட்டு புதிய பேருந்து நிலையம் அருகில் மாவட்டச் செயலாளர். தாட்சாயிணி தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. சங்கத்தின் மாவட்ட நிர்வாகிகள் அன்பு, குமார் ஆகியோர் உரையாற்றினர்.