districts

img

தினமலருக்கு எதிர்ப்பு...

பள்ளி மாணவர்களின் காலை காலை உணவு திட்டத்தை கொச்சைப்படுத்தி தினமலர் நாளிதழ் செய்தி வெளியிட்டது. இதனை கண்டித்து வியாழனன்று (ஆக. 31) சைதாப்பேட்டையில் இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம், இந்திய மாணவர் சங்கம் ஆகிய அமைப்புகளை சேர்ந்தவர்கள் அந்த பத்திரிகையை எரித்து போராட்டம் நடத்தினர். இதில் வாலிபர் சங்க தென்சென்னை மாவட்ட செயலாளர் தீ.சந்துரு, மாணவர் சங்க மாவட்டத் தலைவர் எஸ்.ஆனந்த், செயலாளர் ரா.பாரதி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

அரசு பள்ளி மாணவர்களுக்கு கொண்டு வரப்பட்ட காலை உணவு திட்டத்தை கொச்சைப்படுத்தி செய்தி வெளியிட்ட தினமலர் பத்திரிகையை கண்டித்து தமிழகம் முழுவதும் மாணவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இதன் ஒருபகுதியாக வியாழனன்று (ஆக.31) ராயப்பேட்டையில் உள்ள தினமலர் அலுவலகம் முன்பு இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம், இந்திய மாணவர் சங்கத்தினர் நாளிதழை எரித்து போராட்டம் நடத்தினர். இதில் வாலிபர் சங்க மத்திய சென்னை மாவட்டத் தலைவர் சித்தார்த்தன். செயலாளர் கே.மணிகண்டன், பொருளாளர் பார்த்திபன், ஆ.பிரியதர்ஷினி எம்.சி., மாணவர் சங்க மாவட்டத் தலைவர் வே.அருண்குமார், செயலாளர் எஸ்.மிருதுளா உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

முதலமைச்சரின் காலை உணவு திட்டத்தை இழிவுபடுத்தும் வகையில் தினமலர் நாளிதழில் வெளியிட்ட செய்தியை கண்டித்து பாலர் பூங்கா, வியாபாரிகள் சங்கம், அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கம் சார்பில் ராயபுரத்தில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

தமிழக அரசால் செயல்படுத்தப்படும் காலை உணவு திட்டத்தையும் சத்துணவு ஊழியர்கள் மூலம் அமல்படுத்த வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு சத்துணவு ஊழியர் சங்கத்தின் மாவட்டத் தலைவர் கே.பாபு தலைமையில் மடியேந்தி போராட்டத்தில் ஈடுபட்டனர். இதில் மாவட்டச் செயலாளர் டி.ஜெயசுதா உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.