districts

img

பாழடைந்து வரும் அரசுப் பள்ளி கட்டிடங்கள் புதுவை அரசுக்கு மாணவர் சங்கம் எச்சரிக்கை

புதுச்சேரி,ஜூன்.15-

    நகர்ப்புற அரசு பள்ளிகளின் கட்ட மைப்பு வசதியை போர்கால அடிப் பைடையில் மேம்படுத்த வேண்டும் என்று இந்திய மாணவர் சங்கம் புதுச்சேரி அரசை வலியுறுத்தியுள்ளது.

    இதுகுறித்து சங்கத்தின் புதுச்சேரி  தலைவர் ஜெயபிரகாஷ்,செயலாளர் பிரவீன்குமார் ஆகியோர் வெயி யிட்டுள்ள செய்தி குறிப்பு வருமாறு:-

    ஸ்மார்ட் சிட்டி திட்டம் மற்றும் நகர்ப்புற வளர்ச்சி திட்டம் ஆகியவை கள் எந்த அளவுக்கு முக்கியமோ அதே அளவு புதுச்சேரி நகர்புற அரசு பள்ளிகளின் கட்டமைப்பு வசதி களை மேம்படுத்துவதும் முக்கியம்.  அதற்கு மாறாக  ஆளும் என்.ஆர் காங்கிரஸ் மற்றும் பாஜக கூட்டணி அரசாங்கம் நகர்ப்புற அரசு பள்ளி களின் கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்து வதில் பெரும் தோல்வி அடைந்திருக்கிறது.

     குறிப்பாக, நகர்புறத்தில் தொடர்ச்சி யாக பழமை வாய்ந்த அரசுப் பள்ளி கட்டிடங்களை சீரமைக்கா மல் இடிந்து விழும் வரைக்கும் காலத்தை கடத்தி வருகிறது. இதனால், அதுபோன்ற பள்ளிகளின் மாணவர்களை மாற்று பள்ளிக்கு மாற்றுவதிலும் இடம் மற்றும் ஆசிரியர் பற்றாக்குறை விவகாரத்திலும் மாநில அரசுக்கு தோல்வி அடைந்துள்ளது.

   உதாரணத்திற்கு, கோடை விடு முறை முடிந்து தற்போது பள்ளிகள் துவங்கப்பட்ட நிலையில், நகர்ப்புறத்தில் பல இடத்தில் அரசுப் பள்ளி மாணவர்கள் இடப்பாற்றாக் குறை காரணமாக மாணவர்களும் பெற்றோர்களும் தன் எழுச்சியான போராட்டங்களில் ஈடுபட்டு வரு கின்றனர்.  

    அதன் ஒருபகுதியே சுப்புரமணிய பாரதியார் மேல்நிலைப்பள்ளி மாண வர்கள் தங்கள் பள்ளி கட்டிடத்தை சீர்செய்யகோரி மறைமலை அடிகல் சாலையில் மறியல் போராட்டம் நடத்தியதாகும். இதையெல்லாம் அரசு கவ னத்தில் கொண்டு, போர்க்கால அடிப்படையில் நகர்ப்புற அரசு பள்ளி கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்த வேண்டும்.

   இதே நிலைமை தொடர்ந்தால்,அனைத்து பள்ளி மாணவர்களையும் ஒன்று திரட்டி இந்திய மாணவர் சங்கம் சட்டமன்றத்தை முற்றுகையிடும். இவ்வாறு தெரிவித்திருக்கிறார்கள்.