பிஎஸ்என்எல் நிறுவனத்திற்கு 4ஜி அலைக்கற்றை சேவையை உடனே வழங்க வேண்டும், நாடாளுமன்ற நிலைக் குழுவின் பரிந்துரைகளை அமலாக்க வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி அகில இந்திய ஓய்வூதியர் சங்கத்தின் சார்பில் புதுச்சேரி பிஎஸ்என்எல் தலைமை பொது மேலாளர் அலுவலகம் அருகே நடைபெற்ற தர்ணாவில் அகில இந்திய பிஎஸ்என்எல் டிஓடி ஓய்வூதியர்கள் சங்கத்தின் மாவட்டத் தலைவர் வி.ராமகிருஷ்ணன், மாநிலச் செயலாளர் ஆர்.ராஜசேகர், புதுச்சேரி ஓய்வூதியர் சங்கத்தின் மாநிலச் செயலாளர் நடராஜன், நிர்வாகிகள் முத்து, கொளஞ்சியப்பன், சுப்பிரமணியன், குமார், கலியபெருமாள் ஆகியோர் பேசினர்.