districts

காணாமல்போன 2,200 குழந்தைகளை மீட்க நடவடிக்கை டிஜிபி

சென்னை, ஜூன் 9-

    தமிழ்நாட்டில் கடந்த 10 ஆண்டுகளில் காணாமல் போன 2,200 குழந்தைகளை விரைவில் கண்டுபிடிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது என காவல்துறைத் தலைவர் சைலேந்திர பாபு தெரிவித்தார்.

    ஆவடி காவல் ஆணையரகத்துக்கு உட்பட்ட பட்டாபிராம் அனைத்து மகளிர்  காவல் நிலையத்தை தமிழ்நாடு காவல்துறை  தலைவர் (டிஜிபி) சைலேந்திர பாபு, பொது மக்களின் பயன்பாட்டுக்காக திறந்து வைத்தார்.

    பின்னர் செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது: கடந்த ஆண்டு மட்டும் அனைத்து மகளிர் காவல் நிலையங்களில் 75 ஆயிரம் மனுக்கள் மகளிரிடமிருந்து இருந்து பெறப்பட்டுள்ளன. அம்மனுக்கள் மீது விசாரணை செய்து, சில மனுக்கள் மீது வழக்குபதிவு செய்யப்பட்டு, மகளிருக்கு நியாயம் வழங்கப்பட்டுள்ளது”என்றார்.  

    மகளிருக்கு உள்ள பிரச்சினைகளை அறிவியல் மற்றும் உளவியல் பூர்வமாக அணுக ஏதுவாக 120 அனைத்து மகளிர் காவல்  நிலைய அதிகாரிகளுக்கு சமீபத்தில்,  பெங்களூரு மனநிலை மருத்துவ நிபுணர் கள்மூலம் பயிற்சி அளிக்கப்பட்டுள்ளது என்றும் அவர் தெரிவித்தார்.

   தமிழ்நாட்டில் கடந்த 10 ஆண்டுகளில்,  18 வயதுக்கு உட்பட்ட 2,200 குழந்தைகள் காணாமல் போய் உள்ளனர். இதுதொடர் பாக நீதிமன்றங்கள் சில கருத்துகளை  தெரிவித்துள்ளன. அதன் அடிப்படையில் 1,624 காவல் நிலைய அதிகாரிகள், 222  அனைத்து மகளிர் காவல் நிலைய அதிகாரி கள், உடனடியாக தனி கவனம்செலுத்தி, காணாமல் போன குழந்தைகளை 5 நாட்களுக்குள் கண்டுபிடிக்க உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது என்றும் அவர் கூறினார்.