கிருஷ்ணகிரி,பிப்15- தேசிய குடற்புழு நீக்க தினத்தை முன்னிட்டு கிருஷ்ணகிரி மாவட்டம் முகலூர் கிராம அரசு நடுநிலைப் பள்ளியில் மாணவர்களுக்கு குடற்புழு நீக்க மருத்துவம் மற்றும் விழிப்புணர்வு முகாம் நடைபெற்றது. செயின்ட் பீட்டர்ஸ் மருத்துவக் கல்லூரி மருத்துவமனை மற்றும் ஆராய்ச்சி நிறுவனத்தின் இம் முகாமில் 1 முதல் 19 வயது வரை உள்ள பள்ளி மாணவ மாணவிகள் மற்றும் அதே வயது ஒத்த கிராமத்தைச் சேர்ந்த அனைவருக்கும் பரிசோதனை நடத்தி குடற்புழு நீக்க மாத்திரை வழங்கப்பட்டது. இந்நிறுவனத்தின் குழந்தைகள் நல மருத்துவர் புருஷோத்தமன் குடற்புழுவினால் ஏற்படும் நோய்கள் பற்றியும், குடற்புழு வராமல் தடுக்கும் முறை பற்றியும் விளக்கினார். ஊராட்சி தலைவர் மகேஷ் தலைமை தாங்கினார்.தலைமை ஆசிரியர் ரவி ஆசிரியர்கள், செவிலியர்கள், மக்கள் தொடர்பு அலுவலர் செல்வராஜ் ஆகியோர் கலந்து கொண்டனர்.