districts

சி.என்.அண்ணாதுரையை ஆதரித்து துணைசபாநாயகர் கு.பிச்சாண்டி பிரச்சாரம்

திருவண்ணாமலை,மார்ச் 31- திருவண்ணாமலை மக்களவை தொகுதியின் கிழக்கு பகுதியில் உள்ள கீழ்பென்னாத்தூரில் திமுக வேட்பாளர்  சி.என்.அண்ணா துரையை கூட்டணி கட்சி நிர்வாகிகளிடம் அறி முகப்படுத்தி சட்டபேரவை துணைத்தலைவர் கு.பிச்சாண்டி பிரச்சாரம் செய்தார். இந்த பிரச்சாரத்தில் துணை சபாநாயகர் கு.பிச்சாண்டி பேசுகையில், இந்தியா கூட்டணி ஒரு வெற்றி கூட்டணியாக நாடு முழுவதும் வலம் வருகிறது.  மற்ற கூட்டணிகள் எல்லாம் நெல்லிக்காய் மூட்டையை பிரித்தாற்போல் சிதறிக்கிடக்கிறது.  கடந்த  இரண்டு மக்களவைத் தொகுதி  தேர்தலிலும் பிரதமர் மோடி 35 விழுக்காடு  வாக்குகளை மட்டுமே பெற்றார். எதிர்க்கட்சி கள் 65 விழுக்காடு வாக்கு களை பெற்றது. தற்போது அனைத்து எதிர்க் கட்சி களும் ஓரணியில் இணைந்து ‘இந்தியா’ கூட்டணி பலமாக நிற்கிறது. இந்த பிரமாண்ட கூட்டணி தான் இந்தியாவை ஆளப்போகிறது. வேட்பாளர் சி.என். அண்ணாதுரை வெற்றி பெற்ற உடன்  பல்வேறு மக்கள் நலத் திட்டங்களை செயல்படுத்துவார். எனவே அவரை கூட்டணி கட்சி நிர்வாகிகள் வெற்றி பெறச் செய்ய வேண்டும் என்று பேசினார். வேட்பாளர் சி.என்.அண்ணாதுரை, நகர தி.மு.க செயலாளர் அன்பு,  ஒன்றிய செய லாளர் ஆராஞ்சி ஆறு முகம், முன்னாள் பேரூ ராட்சி தலைவர் பன்னீர் செல்வம்,பேரூராட்சி தலை வர் சரவணன், துணைத் தலைவர் தமிழரசி சுந்தர மூர்த்தி,  மற்றும்  கூட்டணி கட்சி நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.