districts

ரூ.40 லட்சம் லஞ்சப் பணத்துடன் துணை ஆட்சியர் கைது

விழுப்புரம், மார்ச் 30- விழுப்புரம் அருகே ரூ.40 லட்சம் பணத்துடன் வந்த துணை ஆட்சியரை லஞ்ச ஒழிப்புத் துறை மடக்கி வைத்தனர். திருச்சி மாவட்ட ஆதிதிராவிடர் நலத்துறை யில் காலியாக உள்ள சமையலர் உள்ளிட்ட பல்வேறு பணிகள் நிரப்பப்பட உள்ளன. இந்தப் பணியிடங்களை நிரப்புவதற்கு திருச்சி பகுதியில் லஞ்சப் பணம் வசூலிக்கப் பட்டுள்ளது. அந்த பணத்துடன் மாவட்ட ஆதிதி ராவிடர் நலத்துறை துணை ஆட்சியர் சரவ ணக்குமார் காரில் சென்னைக்கு வந்து கொண்டிருப்பதாக விழுப்புரம் மாவட்ட லஞ்ச ஊழல் தடுப்பு பிரிவுக்கு தகவல் கிடைத்துள் ளது. இதையடுத்து, மாவட்ட எல்லையான மடப் பட்டு கெடிலம் அருகே ஒரு காரை லஞ்ச ஒழிப்பு துறை கூடுதல் காவல் கண்காணிப் பாளர் தேவநாதன் தலைமையிலான காவலர்கள் நிறுத்தை சோதனை செய்தனர். அப்போது, பையில் கட்டுக்கட்டாக 500 ரூபாய் நோட்டுகள் இருந்ததை கண்டு பிடித்தனர். இதுகுறித்து துணை ஆட்சியர் சரவணகுமார், அவரது கார் ஓட்டுநர் மணி ஆகியோரிடம் விசாரணை செய்தபோது முன்னுக்குப்பின் முரணாக கூறியுள்ளனர்.  முதற்கட்ட விசாரணையில், 40 லட்சம் ரூபாய் திருச்சியிலிருந்து சென்னைக்கு கொண்டு செல்லப்படுவது தெரியவந்தது. இருப்பினும் இந்த பணம் யாருக்கு, எதற்காக, கொண்டு செல்லப்படுகிறது என்பது தெரியவில்லை. கணக்கில் வராத பணத்தை எடுத்து வந்ததால் அந்த பணத்தை யும்  சொகுசு காரையும் பறிமுதல் செய்து தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.