பாலியல் வன்கொடுமைக்கு ஆளான இருளர் இன பெண்களுக்கு உரிய பாதுகாப்பும் நிவாரணம் வழங்கிட வலியுறுத்தி அனைத்திந்திய ஜனநாயக மாதர்சங்கம், தீண்டாமை ஒழிப்பு முன்னணியின் செங்கல்பட்டு மாவட்டக்குழு சார்பில் செங்கல்பட்டு மாவட்டட ஆட்சியர் அலுவலகம் எதிரே ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. முன்னணியின் மாவட்ட செயலாளர் க.புருசோத்தமன் தலைமையில் தலைவர் இ.சங்கர், நிர்வாகிகள் ராமலிங்கம், எம்.ரவி, மு.முனிச்செல்வம், ஜனநாயக மாதர் சங்கத்தின் மாநில தலைவர் எஸ்.வாலண்டினா, மாவட்ட நிர்வாகிகள் ஜெயந்தி, தமிழரசி, காவல் நிலைய சித்தரவதைக்கு எதிரான கூட்டியக்கத்தின் மாநில ஒருங்கிணைப்பாளர் ஆசீர், மாவட்ட ஒருங்கிணைப்பாளர் ம.பா.நந்தன் உள்ளிட்ட பலர் பேசினர்.