அரக்கோணம், ஜூன் 12-
குறவரின மக்களின் கோரிக்கைகளை உடனடியாக நிறைவேற்றி வலியுறுத்தி முதல்வரின் கவனத்தை ஈர்க்கும் வகையில் ஜூலை முதல் வாரம் மாவட்ட அளவில் ஆர்ப்பாட்டம் நடத்து வது என்றும் குறவன் பழங்குடி மக்கள் முன்னேற்ற சங்கம் முடிவு செய்துள்ளது.
தமிழ்நாடு குறவன் பழங்குடி மக்கள் முன்னேற்ற சங்கத்தின் மாநிலக்குழுக்கூட்டம் அரக்கோணத்தில் மாநிலத் தலைவர் வி.கே.தணிகாசலம் தலைமையில் நடைபெற்றது. சங்கத்தின் மாநில பொதுச் செயலாளர் ஏ.வி.சண்முகம், தமிழ்நாடு மலைவாழ் மக்கள் சங்கத்தின் மாநிலத் தலைவர் பி.டில்லிபாபு, இந்த கூட்டத்தில் மாநிலப் பொருளாளர் வி.வேலு மாநில துணைத் தலைவர் ஜி.குப்பன் மாதைய்யன் மாநில துணைச்செயலாளர் வழக்கறிஞர் புகழேந்தி , ஜெயந்தி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
குறிஞ்சி நிலத்தோன்றல் களான குறவன் இனத்தை மலைக்குறவன் என்றால் எஸ்டி, குறவன் எஸ்சி, கொரவர் எம்பிசி மற்றும் வாழ்கின்ற ஊர், செய்கின்ற தொழில்களை வைத்து 26 பிரிவாக பிரித்து டிஎன்சி என பல்வேறு பட்டியலில் பிரித்து வைத்துள்ளனர். இந்த பட்டியல் குளறுபடிகள் காரணமாக எந்த பிரிவிலும் இனச்சான்று பெற முடியாமல் வாழ்வின் விளிம்பு நிலைக்குத் தள்ளப்பட்டு வருகின்றனர். எனவே, அந்த பட்டியல் குளறுபடிகளை நீக்கி பழங்குடி பட்டியலில் சேர்க்க தமிழ்நாடு அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.
மாவட்ட அளவிலான ஆதி திராவிடர் மற்றும் பழங்குடி யினர் நலக்கமிட்டிகளில் குறவரின மக்களுக்கு உரிய பிரதிநிதித்துவம் வழங்க வேண்டும், குறவரின மக்க ளுக்கு குடிமனைப் பட்டா, தொகுப்பு வீடுகள், சொந்தமாக தொழில் தொடங்க தாட்கோ மூலம் கடன் வழங்க வேண்டும் என்றும் தீர்மானங்கள் நிறை வேற்றப்பட்டன.