‘மாநிலங்கள் வளர்வது இந்தியாவுக்கு நல்லதல்ல’ என்று கூறிய ஆளுநர் ஆர்.என்.ரவியின் கருத்தை கண்டித்து சென்னை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகே தமிழக மக்கள் முன்னணி சார்பில் பாவேந்தன் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலக் குழு உறுப்பினர் எம்.ராமகிருஷ்ணன் மற்றும் மு.வீரபாண்டியன் (சிபிஐ), வன்னியரசு (விசிக), சௌ.சுந்தரமூர்த்தி, பொழிலன் (தமிழக மக்கள் முன்னணி), ஜெய்னுலாபுதீன் (மமக), குமரன் (திக) உள்ளிட்டோர் பேசினர்.