உரவிலை உயர்வை கண்டித்து உத்திரமேரூரில் தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் சார்பில் மாவட்டத் தலைவர் நேரு தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது .இதில் மாவட்டச் செயலாளர் பெருமாள், கரும்பு விவசாயிகள் சங்க மாநில துணைத் தலைவர் நந்த கோபால், மாவட்ட துணைத்தலைவர் பெருமாள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.