districts

img

புதுச்சேரியில் சமூக நல்லிணக்க இயக்கத்தின் சார்பில் ஆர்ப்பாட்டம்

மனித உரிமை காப்பாளர்கள் டீஸ்டா செதல்வாட், காவல்துறை முன்னாள் அதிகாரி ஆர்.பி.ஸ்ரீகுமார் ஆகியோரை பழிவாங்கும் நோக்கத்தோடு குஜராத் பாஜக அரசு கைது செய்துள்ளதை  கண்டித்து புதுச்சேரியில் சமூக நல்லிணக்க இயக்கத்தின் சார்பில் செவ்வாயன்று (ஜூன் 28) ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஒருங்கிணைப்பாளர் ராமச்சந்திரன் தலைமை வகித்தார். ஜனநாயக இயக்கங்களின் தலைவர்கள் வீரமணி, பஷீர், மூத்த தொழிற்சங்க தலைவர்கள் முருகன்,  ராஜாங்கம், பெருமாள் உள்ளிட்ட பலர் பேசினர்.