சமையல் எரிவாயு விலை உயர்வை கண்டித்து சனிக்கிழமையன்று (மார்ச் 26) அயனாவரத்தில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கத்தின் சார்பில் நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில் மத்திய சென்னை மாவட்டத் தலைவர், ஆ.சாந்தி, செயலாளர் வெ.தனலட்சுமி, துணைத்தலைவர் அ. விமலா , முனியம்மா சலொமி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.