எல்பிஜி கேஸ் விலை உயர்வை கண்டித்து திருத்தணியில் செவ்வாயன்று (நவ 2) அன்று ஆட்டோ தொழிலாளர் சங்கத்தின் சார்பில் சங்க தலைவர் சி.வெங்கடேசன் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் மாவட்டநிர்வாகிகள் ஏ.கரிமுல்லா, எம்.சந்திரசேகரன், எம்.தயாளன், சாலைப்போக்குவரத்து மாவட்ட செயலாளர், எஸ்.ஜெயவேல் மாவட்டத் துணைத் தலைவர் ரகுபதி உட்பட பலர் கலந்து கொண்டனர்.