சமூக நீதி மண்ணில் தொடரும் சாதி ஆணவ கொலையை தடுத்திட தமிழ்நாடு அரசு தனிச்சட்டம் இயற்ற வேண்டும் என அறிவுறுத்தி தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணி சார்பில் திருவள்ளூரில் ஆர்ப்பாட்டம் வியாழனன்று (ஏப்.20) நடைபெற்றது. முன்னணியின் மாவட்ட தலைவர் இ.எழிலரசன் தலைமையில் மாநிலத் பொருளாளர் இ.மோகனா, சிபிஎம் மாவட்ட செயலாளர் எஸ்.கோபால் உள்ளிட்ட பலர் பங்கேற்று பேசினர்.