நில அளவை மற்றும் நிலவரி திட்ட இயக்குநரின் ஊழியர் விரோத போக்கை கண்டித்து தமிழ்நாடு நில அளவை அலுவலர்கள் ஒன்றிப்பின் சார்பில் விழுப்புரம் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகே மாவட்ட தலைவர் ம.மகேஸ்வரன் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் அரசு ஊழியர் சங்க மாவட்டத் தலைவர் கே.சரவணன், செயலாளர் எஸ்.சிவக்குமார், சிஐடியு மாவட்டச் செயலாளர் ஆர்.மூர்த்தி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.