கள்ளக்குறிச்சி மாணவி ஸ்ரீமதி மரணத்திற்கு நீதி கேட்டு சென்னையில் டிஜிபி அலுவலகத்தை முற்றுகையிட சென்ற மாதர் சங்க தலைவர்கள் மீது வழக்குப் பதிவு செய்ததை கண்டித்தும், பல மாவட்டங்களில் தலைவர்களின் வீடுகளுக்கு சென்று அங்கேயே கைது செய்த காவல்துறையின் அராஜகத்தை கண்டித்தும் ஓசூர் மத்திகிரி பேருந்து நிலையம் அருகே மாதர் சங்கத்தின் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் மாவட்டச் செயலாளர் ரேகா, பொறுப்பாளர் ஜேம்ஸ் ஆஞ்சலா மேரி, துணைச் செயலாளர் வெண்ணிலா, மாநகரச் செயலாளர் ரத்னா, தலைவர் புனிதா, மிடுகரப்பள்ளி கிளைத் தலைவர் சந்திரிகா உள்ளிட்ட கலந்து கொண்டனர்.