உயர்நீதிமன்றத்தில் தமிழ் மொழியை வழக்காடு மொழியாக மாற்றக் கோரி வழக்கறிஞர்கள் சார்பில் சென்னை உயர்நீதிமன்றம் ஆவின் வாயிலில் ஆர்ப்பாட்டம் புதனன்று (நவ. 1) நடைபெற்றது. இதில் கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் ஆர்.நல்லகண்ணு, அகில இந்திய வழக்கறிஞர்கள் சங்கத்தின் மாநிலப் பொதுச்செயலாளர் ச.சிவக்குமார், மாவட்டத் தலைவர் பாலசுப்பிரமணியம், மாவட்டச் செயலாளர் சீனிவாசன், மாநிலக் குழு உறுப்பினர் ஷினு, மாநிலத் துணைத் தலைவர் இளங்கோ, சி.மகேந்திரன் (சிபிஐ), பேராசிரியர் எம்.எச்.ஜவாஹிருல்லா (மனித நேய மக்கள் கட்சி) உட்பட பலர் கலந்து கொண்டனர்.