districts

img

வழங்கப்படாத   7 மாதங்களாக சம்பளம் வழங்க வலியுறுத்தி சிஐடியு சார்பில் ஆர்ப்பாட்டம்

மதுராந்தகம் அடுத்த படாளத்தில் தனியார் தொழிற்சாலையில் கடந்த 7 மாதங்களாக சம்பளம் வழங்கப்படாத  தொழிலாளர்களுக்கு உடனே ஊதியம் வழங்கவேண்டும், முன்னறிவிப்பின்றி 200 தொழிலாளர்களை பணி நீக்கம் செய்ததை திரும்பப்பெற வேண்டும் என வலியுறுத்தி வருவாய்க் கோட்டாட்சியர் அலுவலகம் முன்பு சிஐடியு சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. சிஐடியு மாவட்ட துணைத் தலைவர் பி.மாசிலாமணி தலைமையில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் மாவட்டத் தலைவர் கே.சேஷாத்ரி, மாவட்டச் செயலாளர் க.பகத்சிங் தாஸ், தொழிற்சாலை நிர்வாகிகள் தம்பிதுரை, அஜித்குமார் தனசேகரன், சசிரஞ்சன் மற்றும் சிபிஎம்  மாவட்ட செயலாளர் எஸ்.ராஜா  உள்ளிட்ட பலர் பேசினர்.