மாவட்ட ஆட்சியர், காவல் கண்காணிப்பாளர் உள்ளிட்ட மாவட்ட தலைமை அலுவலங்களில் சைகை மொழிபெயர்ப்பாளர்களை நியமிக்க கோரி திங்களன்று (ஜூலை 24) தமிழ்நாடு முழுவதும் மாவட்ட ஆட்சியர் அலுவலகங்கள் முன்பு தமிழ்நாடு அனைத்து வகை மாற்றுத்திறனாளிகள் மற்றும் பாதுகாப்போர் உரிமைகளுக்கான சங்கத்தின் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதன் ஒரு பகுதியாக செங்கல்பட்டு மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பாலாஜி தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. மாவட்டத் தலைவர் வெள்ளி கண்ணன், மாவட்ட செயலாளர் தாட்சாயணி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டு பேசினார்