districts

img

புதுச்சேரியில் ‘இந்தியா’ கூட்டணி கட்சிகள் சார்பில் ஆர்ப்பாட்டம்

நாடாளுமன்ற உறுப்பினர்கள் சஸ்பெண்ட் செய்ததை கண்டித்து ‘இந்தியா’ கூட்டணி சார்பில் கடலூர் தலைமை தபால் நிலையம் எதிரே ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. திமுக மாநகர செயலாளர் கே.எஸ்.ராஜா தலைமை வகித்தார். சிபிஎம் மாவட்டச் செயலாளர் கோ.மாதவன் முன்னிலை வகித்தார். திமுக தேர்தல் பணிக்குழு பொறுப்பாளர் இள.புகழேந்தி, சிபிஎம் மாநில செயற்குழு உறுப்பினர் சாமுவேல் ராஜ்,  காங்கிரஸ்  மாவட்ட தலைவர் திலகர், மாநிலச் செயலாளர் வழக்கறிஞர் சந்திரசேகர், சிபிஎம் மாவட்ட செயற்குழு உறுப்பினர் சுப்பராயன், நகர செயலாளர் அமர்நாத், சிபிஐ மாவட்டச் செயலாளர் துரை, மாவட்ட துணை செயலாளர் குளோப், நாகராஜ், விடுதலை சிறுத்தைகள் மாநில நிர்வாகிகள் தாமரைச்செல்வன், திருமார்பன், மாவட்டச்  செயலாளர் செந்தில்,  மதிமுக நிர்வாகி கண்ணன், மனிதநேய மக்கள் கட்சி மாவட்ட செயலாளர் ரஹீம், குடியிருப்போர் சங்க நிர்வாகிகள் மருதவாணன், வெங்கடேசன் உள்ளிட்டோர் உரையாற்றினர்.