districts

img

தமிழ்நாடு அனைத்துவகை மாற்றுத்திறனாளிகள் ஆர்ப்பாட்டம்

75 விழுக்காட்டிற்கு கீழ் குறைபாடு உள்ள மாற்றுத்திறனாளிகளுக்கும் உதவித்தொகை உயர்த்தப்படும் என உறுதியளித்த தமிழக அரசு நடப்பு சட்டமன்ற கூட்டத்தில் அறிவிக்காததை கண்டித்து தமிழ்நாடு அனைத்துவகை மாற்றுத்திறனாளிகள் மற்றும் பாதுகாப்போர் உரிமைகளுக்கான கூட்டமைப்பின் வடசென்னை மாவட்டக்குழு சார்பில் பெரம்பூரில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. மாவட்டத் தலைவர் ஆர்.ஜெயச்சந்திரன் தலைமையில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் பொருளாளர் ஆர்.நடராஜன், பொறுப்பாளர் எஸ்.ராணி, நிர்வாகிகள் ராஜி, முரளி, ,அகிலா, சாரதி, தில்ஷாத் உட்பட பலர் கலந்து கொண்டனர்