districts

img

மணிப்பூரில் நடைபெற்று வரும் இனப்படுகொலையை தடுக்க வலியுறுத்தி மாதவரம் நீதிமன்ற வளாகம் அருகே தலைவர் ஜெயசீலன் தலைமையில் ஆர்ப்பாட்டம்

மணிப்பூரில் நடைபெற்று வரும் இனப்படுகொலையை தடுக்க வலியுறுத்தியும், பெண்களை கூட்டு பாலியல்  வன்கொடுமை செய்த குற்றவாளிகள் அனைவரையும் கைது செய்ய வலியுறுத்தியும் வழக்கறிஞர்கள் சங்கம் சார்பில் மாதவரம் நீதிமன்ற வளாகம் அருகே தலைவர் ஜெயசீலன் தலைமையில் செவ்வாயன்று (ஜூலை 25) ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் செயலாளர் ஏழுமலை, பொருளாளர் வீ.ஆனந்தன், விஜயகுமார், சத்யகுமார், சங்கர், அப்பன்ராஜ், ரமேஷ்பாபு உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.