districts

img

பல்கலைக் கழக நுழைவு வாயில் முன்பு ஆர்ப்பாட்டம்

புதுச்சேரி மத்திய பல்கலைகழக நிர்வாகத்தின் மாணவர் விரோத  தடை ஆணையை திரும்பப் பெறக் கோரி இடதுசாரிகள், திமுக உள்ளிட்ட கட்சிகள் இணைந்து காலாப்பட்டிலுள்ள பல்கலைக் கழக நுழைவு வாயில் முன்பு ஆர்ப்பாட்டம் நடத்தின. மாணவர் சங்க பிரதேச தலைவர் ெஜயபிரகாஷ் தலைமை தாங்கினார். தமிழ்நாடு மாநிலத் தலைவர் கண்ணன், சிபிஎம் மத்தியக்குழு உறுப்பினர் சுதா சுந்தரராமன், பிரதேச செயலாளர் ஆர். ராஜாங்கம், ஆனந்த், திமுக மாணவர் அணி அமைப்பாளர் மணிமாறன், விசிக புதுவை தலைவர் தேவபொழிலன், திக தலைவர் சிவ.வீரமணி, புதுச்சேரி மாணவர் கூட்டமைப்பு தலைவர் சாமிநாதன், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மார்க்சிஸ்ட் லெனினிஸ்ட் மாநிலத் தலைவர் அக்பர் ஆகியோர் உரையாற்றினர்.