27 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி புதனன்று (டிச.20) சென்னை டிஎம்எஸ் வளாகத்தில் உள்ள புள்ளியியல் துறை தலைமை அலுவலகம் முன்பு தமிழ்நாடு அரசு புள்ளிஇயல் சார்நிலை அலுவலர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர். இந்தப் போராட்டத்திற்கு சங்கத்தின் மாநிலத் தலைவர் ஜெ.பால் ஜெயகுமார் தலைமை தாங்கினார். இந்த போராட்டத்தை ஆதரித்து தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கத்தின் மாநிலச் செயலாளர் அண்ணா குபேரன், கோரிக்கைகளை விளக்கி சங்கத்தின் பொதுச் செயலாளர் இரா.ரமேஷ், பொருளாளர் முனைவர் சீ.அண்ணாமலை, செயலாளர் தி.செந்தில்குமார், மேனாள் தலைவர் ப.அந்துவன் சேரல் உள்ளிட்டோர் பேசினர்.