சென்னை, ஜூலை 5- நியாய விலை கடைகளில் அத்தியா வசிய பொருட்களை தடையின்றி அனைத்து நாட்களிலும் வழங்க வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கம், இந்திய வாலிபர் சங்கம் சார்பில் ஆர்.கே.நகர் தண்டையார்பேட்டை சுனாமி குடியிருப்பு பகுதியில் உள்ள உணவுப் பொருள் வழங்கல் மற்றும் நுகர்வோர் பாது காப்புத் துறை உதவி ஆணையர் அலுவல கத்தில் மனு கொடுக்கும் போராட்டம் நடை பெற்றது. நியாய விலைக் கடைகளில் துவரம் பருப்பு, பாமாயில் மற்றும் அனைத்து சமையல் எண்ணெய்களையும் மாதா மாதம் வழங்க வேண்டும், அரிசி உள்ளிட்ட அத்தியா வசிய பொருட்கள் கள்ளச்சந்தையில் விற்கப்படுவதை தடுக்க வேண்டும், ரேஷன் கடைகளில் நடைபெறும் முறைகேடுகளை தடுக்க வேண்டும், அனைத்து கடைகளிலும் சிசி டிவி கேமரா அமைத்து கண்காணிக்க வேண்டும், முதியோர் மற்றும் கைரேகை பதிவாகாத நபர்களை அலைக்கழிக்காமல் தடையின்றி பொருட்களை வழங்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகள் ஆர்ப் பாட்டத்தில் வலியுறுத்தப்பட்டன. இதில் மாதர் சங்க மாவட்டச் செயலாளர் எஸ்.பாக்கியலட்சுமி, 41ஆவது வார்டு மாமன்ற உறுப்பினர் பா.விமலா, பகுதி தலைவர் சரிதா, பொருளாளர் பிரவீனா, வாலிபர் சங்க மாவட்டச் செயலாளர் எல்.பி.சரவணத்தமிழன், பகுதி செயலாளர் விஜய், மாவட்டக் குழு உறுப்பினர் விஜய குமார் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.