districts

img

பணிநீக்க காலத்தில் முறைப்படுத்தக் கோரி ஆர்ப்பாட்டம்

திருவண்ணாமலை, டிச.6-  திருவண்ணாமலையில் தமிழ்நாடு நெடுஞ்சாலை துறை சாலை பணியாளர் சங்கம் சார்பில் நெடுஞ்சாலைத்துறை கோட்ட பொறியாளர் அலுவலகம் முன்பு பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. கோட்டத் தலைவர் ஏழுமலை தலைமை தாங்கினார். சிஐடியு மாவட்டச் செயலாளர் பாரி துவக்கி வைத்து பேசினார். மாவட்டச் செயலாளர் ஏழுமலை, மாவட்டத் தலை வர் பார்த்திபன் ஆகியோர் கலந்து கொண்டார். ஓய்வூதியர் சங்கத்தின் மாவட்ட செயலாளர் பச்சையப்பன் வாழ்த்துரை வழங்கினார். திருவண்ணாமலையில் நெடுஞ்சாலை துறையில் பணிபுரியும் தலைமை பொறி யாளர் சந்திரசேகரனின் தொழிற்சங்க விரோத போக்கினை வன்மையாக கண்டித்து, சாலை பணியாளர்கள் 41  மாத பணி காலம் பணிக்காலமாக முறைப் படுத்தி ஆணை வழங்க வலியுறுத்தினர்.