சட்டமேதை அம்பேத்கரை இழிவுபடுத்தி பேசிய ஒன்றிய உள்துறை அமைச்சர் அமித்ஷாவை பதவி விலக கோரி புதனன்று (டிச.25) கோடம்பாக்கம் பவர்ஹவுஸ் அம்பேத்கர் சிலை அருகே ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. சிபிஎம் தி.நகர் பகுதிச் செயலாளர் எம்.குமார் தலைமையில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில், கட்சியின் தென்சென்னை மாவட்டச் செயலாளர் ஆர்.வேல்முருகன், செயற்குழு உறுப்பினர் எஸ்.வெள்ளைசாமி உள்ளிட்டோர் பேசினர்.