districts

img

ரயில்வே கூட்ஸ் ஷெட் சுமைப்பணி தொழிலாளர்களுக்கு அடையாள அட்டை வழங்க வலியுறுத்தி ஆர்ப்பாட்டம்

ரயில்வே கூட்ஸ் ஷெட் சுமைப்பணி தொழிலாளர்களுக்கு அடையாள அட்டை வழங்க வலியுறுத்தியும் குடிநீர், கேண்டீன், ஓய்வு அறை வசதிகள் செய்து கொடுக்க வேண்டியும் காட்பாடி ரயில்வே நிலையம் முன்பு சிஐடியு சங்கத் கிளைத் தலைவர் வி.முருகன் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. சிஐடியு மாவட்டத் தலைவர் எம்.பி.ராமச்சந்திரன், மாவட்டப் பொருளாளர் ஏ.பழனியப்பன், கே.ஜெ.சீனிவாசன், நிர்வாகிகள் மனோகர், அப்பு, கன்னியப்பன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.