திருபெரும்புதூர் பகுதியில் செயல்படும் என்எஸ்கே பேரிங்ஸ், கெஸ்டம்ப், மெண்டார் பிரிண்டிங் உள்ளிட்ட நிறுவனங்களில் தொழிற்சங்கம் அமைத்ததற்காக தற்காலிக நீக்கம் செய்யப்பட்ட தொழிலாளர்களுக்கு பணி வழங்க வேண்டும்; பழிவாங்கல்களை கைவிட வேண்டும், சிஐடியு சங்கத்துடன் பேச்சுவார்த்தை நடத்த வேண்டும் என வலியுறுத்தி அண்மையில் திருபெரும்புதூர் பேருந்து நிலையம் அருகே ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. பொதுத்தொழிலாளர் சங்கத்தின் செயலாளர் ஏ.ஜெனிட்டன் தலைமையில் நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில் சிஐடியு மாநில துணைப் பொதுச்செயலாளர் எஸ்.கண்ணன், மாநிலச் செயலாளர் இ.முத்துக்குமார் உள்ளிட்டோர் பேசினர்.