துணை மின் நிலையங்களை மின்வாரியம் தனியாருக்கு குத்தகை விட்டதை ரத்து செய்யக் கோரி புதனன்று (ஜூலை 6) மின்வாரிய மத்திய சென்னை திட்ட மேற்பார்வை பொறியாளர் அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. தமிழ்நாடு மின்ஊழியர் மத்திய அமைப்பின் திட்ட தலைவர் வி. சீனிவாசன் தலைமையில் நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில் மாநில செயலாளர் பீர்முகமது ஷா, திட்டச் செயலாளர் எஸ்.கண்ணன், பொருளாளர் முருகவேல் உள்ளிட்டோர் பேசினர்.