districts

img

காகிதம் உள்ளிட்ட மூலப் பொருட்களின் விலை உயர்வை குறைக்க கோரி ஆர்ப்பாட்டம்

காகிதம் உள்ளிட்ட மூலப் பொருட்களின் விலை உயர்வை மாநில அரசு கட்டுப்படுத்த வேண்டும், அச்சக தொழில் புரிவோருக்க தனி நலவாரியம் அமைக்க வேண்டும், அச்சுத்துறை மீதான 18 விழுக்காடு ஜிஎஸ்டி-யை ஒன்றிய அரசு குறைக்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி புதனன்று (ஏப்.6) சென்னை அச்சக தொழில் புரிவோர் சங்கத்தின் (சிஐடியு) சார்பில் ராயப்பேட்டையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. சிஐடியு மத்திய சென்னை மாவட்டச் செயலாளர் சி.திருவேட்டை, மாநிலக்குழு உறுப்பினர் தி.ஜெய்சங்கர், சங்கத்தின் பொதுச்செயலாளர் எம்.சையத் அலிகோயா, பொருளாளர் ஏ.ஜோசப்செல்வன், நிர்வாகி கே.மணிகண்டன் உள்ளிட்டோர் பேசினர்.