நூறு நாள் வேலைக்கான கூலி பாக்கியை வழங்காத ஒன்றிய பாஜக அரசை கண்டித்தும் நிலுவையில் உள்ள தொகையை உடனடியாக வழங்க வலியுறுத்தியும் நூறு நாள் வேலையை 200 நாளாக உயர்த்த வேண்டியும் அகில இந்திய விவசாயத் தொழிலாளர்கள் சங்கம் சார்பில் ராணிப்பேட்டை, விக்கிரவாண்டியில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. மாவட்ட, வட்டத் தலைவர்கள் இதில் கலந்து கொண்டனர்.