நாங்குநேரியில் பட்டியல் இன பள்ளி மாணவர்கள் தாக்கப்பட்டதற்கு கண்டனம் தெரிவித்து இந்திய மாணவர் சங்கம் இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம் ஜனநாயக மாதர் சங்கம் மாற்றுத்திறனாளிகள் சங்கம் தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணி உள்ளிட்ட அமைப்புகளின் சார்பில் செங்கல்பட்டு புதிய பேருந்து நிலையத்தில் மாணவர் சங்கத்தின் மாவட்டச் செயலாளர் மு.தமிழ் பாரதி தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.