தமிழக அரசு தொழிற்சங்கங்களிடம் பேச்சுவார்த்தை நடத்தாமல் தன்னிச்சையாக 10 விழுக்காடு போனஸ் அறிவித்ததை கண்டித்தும், அட்வான்ஸ் பணத்தை இன்னும் வழங்காததை கண்டித்தும், சட்டப்படி போனசை வழங்கக் கோரியும் போக்குவரத்து ஊழியர் சங்கம் (சிஐடியு) சார்பில் திருப்பத்தூர் பணிமனை முன்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.