புதிய மோட்டார் வாகன சட்ட திருத்தத்தை திரும்பப்பெறக் கோரி சாலை போக்குவரத்து தொழிலாளர் சங்கம் சார்பில் (சிஐடியு) சார்பில் கடலூரில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.மாவட்டத் தலைவர் வீ.திருமுருகன் தலைமை வகித்தார். மாநிலத் துணைத் தலைவர் பி.கருப்பையன், மாவட்டச் செயலாளர் எஸ்.சண்முகம் மற்றும் பலர் பேசினர்.