மதுராந்தகம், நவ.1- செங்கல்பட்டு மாவட்டம் சித்தாமூர் அருகே விளாங்காடு கொக்கரந்தாங்கல் பகுதியில் கடந்த மூன்று மாதங்களுக்கு முன்னர் விளை நிலங்களின் மத்தியில் புதிதாக கல்குவாரி தொடங்கப்பட்டு செயல்பட்டு வருகிறது. கல் குவாரியில் இருந்து நாள் ஒன்றுக்கு நூற்றுக்கணக்கான லாரிகளில் எடுத்துச் செல்வதாக கூறப்படுகிறது. கல்குவாரியால் இப்பகுதியில் சுற்றுச்சூழல் பாதிப்பு ஏற்படும் என்பதாலும் விவசாயம் முற்றிலும் பாதிக்கப்படும் என்பதாலும் உடனே தடை செய்ய கோரிக்கை விடுத்துள்ளனர். கல்குவாரியால் கால்நடை வளர்ப்ப வர்கள் கால்நடை மேய்ப்பதற்கு இடையூறு ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் பள்ளி கல்லூரி செல்லும் நேரங்களில் அதிக அளவு கனரக லாரிகள் செல்வதால் விபத்துக்கள் ஏற்படுவதாக பொதுமக்கள் தெரிவித்துள்ளனர். மக்களுக்கு பல்வேறு பாதிப்புகளை ஏற்படுத்தி வரும் இந்த கல் குவாரியை மூடக்கோரி அப்பகுதி மக்கள் நூற்றுக்கும் மேற்பட்டோர் வீடுகளில் கருப்பு கொடி ஏற்றியும் கைகளில் கருப்பு கொடி ஏந்தியும் போராட்டத்தில் ஈடுபட்டனர். தகவல் அறிந்து வந்த காவல்துறை யினர் வருவாய் துறையினர் போராட்டத்தில் ஈடுபட்ட பொதுமக்களிடம் பேச்சு நடத்தி இது சம்பந்தமாக இரு தரப்பினரையும் அழைத்து சுமுக பேச்சுவார்த்தை நடத்த நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்ததை அடுத்து கிராம மக்கள் போராட்டத்தை தற்காலிக மாக கைவிட்டனர்.