தொழிலாளர்களின் வேலை நேரத்தை உயர்த்துவதை கண்டித்தும், மோடி அரசின் தொழிலாளர் விரோத போக்கை கண்டித்தும் சிஐடியு மாவட்டத் தலைவர் பி.கருப்பையின் தலைமையில் கடலூரில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. மாவட்டச் செயலாளர் டி.பழனிவேல், நிர்வாகிகள் வி.திருமுருகன், டி. ஜெயராமன், வி.கிருஷ்ண மூர்த்தி, கே.ஸ்டாலின், ஆர்.ஆளவந்தார், சங்கமேஸ்வரன், சாந்தகுமாரி, ஏ.பாபு ஆகியோர் பேசினர்.