யமஹா நிர்வாகத்தின் தொழிலாளர் விரோதப் போக்கை கண்டித்து, போராடும் தொழிலாளர்களுக்கு ஆதரவு தெரிவித்தும் சிஐடியு சார்பில் திருவண்ணாமலை, போளூர் சாலையில் உள்ள யமஹா ஷோரூம் முன்பு சிஐடியு சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. அதேபோல் வேலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.