வட இந்தியாவில் இஸ்லாமியர் மீதான தாக்குதலை கண்டித்து தமிழ்நாடு சிறுபான்மை மக்கள் நலக்குழு சார்பில் மாநில தழுவிய அளவில் நடைபெறும் இயக்கத்தின் ஒரு பகுதியாக வேலூர் அண்ணா கலையரங்கம் அருகில் மாவட்ட தலைவர் ஏ.கதிர் அகமது தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. தீண்டாமை ஒழிப்பு முன்னணி மாவட்ட பொருளாளர் சி.ஞானசேகரன் துவக்கி வைத்து பேசினார். மாதர் சங்க மாநிலத் துணைத் தலைவர் எஸ்டி.சங்கரி, இந்திய யூனியன் முஸ்லிம் லீக் மாவட்ட தலைவர் ஷபீர்கான், மாநகரத் தலைவர் முகமது அனீப், திராவிட முஸ்லிம் முன்னேற்ற கழக தலைவர் ஜி.எஸ்.இக்பால் சிறுபான்மை மக்கள் நலக்குழு மாவட்டச் செயலாளர் வ.அருள்சீனிவாசன், வாலிபர் சங்க மாவட்டத் தலைவர் பெ.திலீபன் ஆகியோர் உரையாற்றினர்.