சென்னை, மார்ச் 27 - சென்னையில் வாழ தகுதியற்ற வாரிய குடி யிருப்புகளை இடித்துவிட்டு, அதே இடத்தில் புதிய வீடுகள் கட்டிக் கொடுக்கும் திட்டத்தை அமைச்சர் தா.மோ.அன்பரசன் தொடங்கி வைத்தார். சென்னையில் உள்ள தமிழ்நாடு வாழ்விட மேம்பாட்டு வாரிய குடியிருப்பு கள் ஏராளமாக உள்ளன. 40 ஆண்டு களுக்கு மேற்பட்ட குடியிருப்புகள் நீண்ட நாள் பயன்பாடு, தட்பவெட்ப சூழ்நிலை போன்ற காரணங்களால் வாழ தகுதியற்ற தாக மாறிவிட்டன. அத்தகைய குடியிருப்பு களை இடித்துவிட்டு புதிய குடியிருப்பு களை கட்டும் திட்டத்தை அரசு அறி வித்துள்ளது. குடியிருந்த மக்கள் மறு கட்டுமானத்தின்போது, வாடகை வீடுகளில் தங்க ஏதுவாக குடும்பத்திற்கு 24ஆயிரம் ரூபாய் அரசு வழங்குகிறது. அதன்படி, மயிலாப்பூர் தொகுதி, குயில் தோப்பு வாரிய குடியிருப்பு மறுகட்டுமானம் செய்யப்பட உள்ளது. இந்த குடியிருப்புகளில் வசிக்கும் 348 குடியிருப்புதாரர்களுக்கு தலா 24ஆயிரம் வீதம் 83.52 லட்சம் ரூபாய் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இந்நிகழ்வில் குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறு வனங்கள் துறை அமைச்சர் தா. மோ. அன்பரசன், பயனாளிகளுக்கு காசோலை களை வழங்கினார். அப்போது பேசிய அமைச்சர் தா.மோ.அன்பரசன், சென்னையில் மட்டும் 27 ஆயிரத்து 500 அடுக்குமாடி குடியிருப்புகள் மக்கள் வாழ தகுதியற்ற வீடுகளாக உள்ளன. இந்த வீடுகள் அனைத்தும் படிப்படியாக இடித்துவிட்டு அங்குள்ள மக்களுக்கு அதே இடத்தில் புதிய வீடு கள் கட்டிதரப்பட உள்ளது. இதன்படி முதற்கட்டமாக 7500 வீடுகள் கட்டுவதற்கு 1200 கோடி ரூபாய் நிதிநிலை அறிக்கையில் ஒதுக்கீடு செய்யப்பட்டது என்றார்.
இத்திட்டம் முதன் முதலாக குயில் தோட்டம் திட்டப் பகுதியில் தொடங்கப் படுகிறது. 266 ச.அடி பரப்பளவில் உள்ள குடியிருப்புகளை இடித்துவிட்டு 410 ச.அடி பரப்பளவு கொண்டதாக 384 வீடுகள் கட்டப்படும். இதற்காக 56.87 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது. இந்த குடி யிருப்புகள் இடிக்கப்பட்டு, 15 மாதங்க ளில் புதிய பொலிவுடன் கூடிய தரமான வீடுகள் கட்டிக் கொடுக்கப்படும். கடைகள், சமுதாயக் கூடம், வாகனங்கள் நிறுத்தும் இடம் ஆகிய அடிப்படை வசதிகளுடன் இந்த குடியிருப்பு பகுதி அமையும். சென்னையில் சிதிலமடைந்த கட்டிடங்கள் படிப்படியாக இடிக்கப்பட்டு புதிய கட்டிடங்கள் கட்டும் பணி விரைவில் தொடங்கும் என்றும் அவர் கூறினார். இந்நிகழ்ச்சியில் வாரிய மேலாண்மை இயக்குநர் ம.கோவிந்த ராவ், மயிலாப்பூர் சட்டமன்ற உறுப்பினர் த.வேலு உள்ளிட்டோர் கலந்துக் கொண்டனர்.