districts

img

திரிபுரா மாநிலத்தில் பாஜகவின் குண்டர்கள் அரங்கேற்றி வரும் ஜனநாயக படுகொலை

திரிபுரா மாநிலத்தில் பாஜகவின் குண்டர்கள் அரங்கேற்றி வரும் ஜனநாயக படுகொலைகளை பார்வையிட சென்ற எம்பிக்கள் குழு மீதும் தாக்குதல் நடத்தியதை கண்டித்து இடதுசாரிகள், மதச்சார்பற்ற கட்சிகள் சார்பில் புதுச்சேரியில் சிபிஎம் மாநிலச் செயலாளர் ஆர். ராஜாங்கம் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.  திமுக புதுச்சேரி மாநில அமைப்பாளரும், சட்டமன்ற எதிர்கட்சி தலைவருமான ஆர். சிவா, காங்கிரஸ் கட்சியின் பிரதேச தலைவர் சுப்பிரமணியன், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் சலீம், விடுதலை சிறுத்தைகள் கட்சியின் முதன்மை செயலாளர் தேவ.பொழிலன், சிபிஐ எம்.எல். மாநிலச் செயலாளர் பாலசுப்பிரமணியன், சிபிஎம் மூத்த தலைவர் முருகன் உட்பட இடதுசாரி கட்சித் தலைவர்கள் மதச்சார்பற்ற கட்சிகளின் தொண்டர்கள் திரளாக கலந்து கொண்டனர்.