சத்துணவு, அங்கன்வாடி உள்ளிட்டு தொகுப்பூதியம் பெற்று வரும் அனைவருக்கும் குறைந்தபட்ச ஓய்வூதியமாக 7 ஆயிரத்து 850 ரூபாய் வழங்கக் கோரி தமிழ்நாடு அரசு அனைத்துத்துறை ஓய்வூதியர் சங்கம் சார்பில் செவ்வாயன்று (மார்ச் 21) சென்னையில் கோரிக்கை மாநில மாநாடு நடைபெற்றது. இதனை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சட்டமன்றக்குழுத் தலைவர் நாகை வி.பி.மாலி தொடங்கி வைத்து பேசினார்.